சனி, 31 மார்ச், 2012

கேளுங்க கேளுங்க




அனுபவித்து  கேட்டு பாருங்க..


http://www.raaga.com/player4/?id=5210&mode=100&rand=0.3732793109957129




பச்சக்கிளி பச்சக்கிளி சுகமா சுகமா ?? மூக்கு யாருக்கும் வருமா வருமா ??
உனக்கும் எனக்கும் காயா பழமா ?? போமா..



தாமரை பூ தாமரை பூ நலமா நலமா வெட்கம் யாருக்கும் வருமா வருமா?? தண்ணிக்குள்ள என்ன தவமா தவமா ??  வாமா..


மீன்களே சின்ன மீன்களே உங்கள் செதில்களை எண்ணவா ..??
போட்டியும் போட்டு நானும் தான் நீந்தவா ??





சிரித்து வாழ வேண்டும்..



:)........... :)............ :)............ :)................. :)

 புரிந்து கொண்டீர்களா எனது பொன்னான புன்னகை மொழியை..???

வெள்ளி, 30 மார்ச், 2012

ஆசை யாரை விட்டது...

என்ன எழுதுவது என்று வெகு நேரமாக மண்டையை குடைந்தும் எதுவுமே
வராத காரணத்தால், ஏன் எழுத வேண்டும் என்ற விபரீத ஆசை வந்தது என்பதையே இங்கு கிறுக்க உள்ளேன் .


முதல் பதிவை விறுவிறுப்பாக்கும் ஆர்வத்துடன் எனது எழுத்துக்களுடன் எனது
மனசாட்சியின் மௌன மொழிக்கும் எழுத்து வடிவம் கொடுத்து இணைக்க உள்ளேன். # ( மனசாட்சி பேசுறது இந்த அடைப்புக்குள் வரும் ) #

இந்த வலைப்பதிவை நான் தொடங்க தூண்டுதலாய் இருந்த எனது நெருங்கிய தோழிகளுக்கும் மற்றும் சில முகம் தெரியாத வலைப்பதிவாளர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள் ..
#( ஆமாம் இவங்க பெரிய கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதி முடிச்சுட்டாங்க. இன்னும்  ஒரு பதிவ கூட முழுசா முடிக்கல  அதுக்குள்ள கோடான கோடி நன்றியெல்லாம் சொல்லி build up -அ பாரு நாய்க்கு ..!!)#


மூன்று வருடத்திற்கு முன்பு ஆர்குட்-ல சேரவே ஆயிரம் முறை யோசிச்ச எனக்கு, இப்ப blog எழுதுற அளவிற்கு தைரியம் வந்துருக்குனா அதுக்கு காரணம் இல்லாமல் இல்லை.
 #( blog ஆரம்பிக்கிறதுக்கு எதுக்கு கொலை பண்ண போற மாதிரி பயந்து சாகுற )#


காலேஜ்-ல இருந்த வரைக்கும் என்ன தான் கிளாஸ்-ஏ நடக்கலனாலும் , 24 மணி நேரம் வெட்டியாவே இருந்தாலும் வெறுமையாய் பீல் பண்ணுனதே கிடையாது.
ஆனா இப்ப என்னதான் வேலைக்கு போனாலும் , ஒரு நாளைக்கு 24 மணி நேரம் பற்றாமலே இருந்தாலும் வாழ்க்கை நிறைவாகவே இல்லை.
#(cut cut cut இந்த sentiment scene எல்லாம் உனக்கு work out ஆகாது. ஒழுங்கா comedy மட்டும் try பண்ணு )#

இந்த blog எழுதும் எண்ணம் வர காரணங்கள்:


முதல் point
1) வாழ்க்கையை அழகா வாழ்ந்து பார்க்கணும் -ன்னு ஒரு ஆசை தான்


கடைசி point-ம் அதே தான் ..
#( இப்படி point போட்டு எழுதின மட்டும் இந்த பதிவுக்கு 10-க்கு  10 மார்க் போடுவாங்க-ன்னு கனவுல கூட நினைக்காத ..)#

சரி இப்ப straight -அ உண்மையான காரணத்தையும் சொல்லிடுறேன் .#( அப்ப இது வரைக்கும் சொன்னது எல்லாம் தில்லு முல்லு தானா ???)# 


பொதுவாகவே எனக்கு மொக்கை  போடுவது ஒரு பொழுதுபோக்கு .#(அட இப்பவரைக்கும் உன் முழு நேர பொழப்பே அது மட்டும் தானா..??)#

கேட்கறவங்க கண் , காது மற்றும் மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு மொக்க போட்டதால் அவங்க கடுப்பாகிட்டாங்க .#(இந்த பாவம் எல்லாம் உன்னை சும்மாவே விடாது )#
அதுக்காக நம்ம கொள்கையை கைவிட முடியுமா ?? #( பெரிய மண்ணாங்கட்டி கொள்கை , மூஞ்சிய பாரு)#
'தமிழ்நாட்டு காரன் பேசலனா தான் செத்து போய்டுவன்'ன்னு ஏதோ ஒரு தமிழ் படத்துல கூட சொல்லி இருகாங்க.
'எனக்கும் ஒரு மாற்றம் தேவைப்பட்டது '#( அன்புகரசு IAS -னு மனசுல நெனைப்பு .. "நெனைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம் ")# ஆனா எனக்கு பொழப்பே இப்படி எல்லாம் நெனைக்கிறது தான் ..


அதுக்காக வைரமுத்து , சுஜாதா, தாமரை range-க்கு எல்லாம் தயவுசெய்து expect பண்ணிடாதிங்க .. என்னால முடிஞ்சஅளவுக்கு நல்ல பதிவுகளை போட்டு உங்களை சிரிக்க வைத்து , சில நேரம் சிந்திக்கவும் வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் #( என்ன கேட்காம எப்படி நீ அதெல்லாம் முடிவு பண்ணலாம் )#


அவ்வளவுதாங்க..


இந்த பதிவிலிருந்து நீங்க என்ன புரிஞ்சுக்கிட்டிங்க-ன்னு எனக்கு சத்தியமா தெரியாது ..
ஆனா ஒன்னு மட்டும் உங்களுக்கு தெளிவா புரிஞ்சு இருக்கும் .
" இந்த உலகத்தில நான் அதிகமா bun வாங்குவது ஏன் மனசாட்சியிடம் இருந்துதான்"-னு தெரிஞ்சு இருக்கும்
 #(fact fact fact fact )#