வாடிக்கையான எந்திர வாழ்க்கையின் வழி அடைத்து
வசந்தத்தின் வாசல் திறந்தாய் நீ..
கட்டி வைத்த விளையாட்டுதனங்களுக்கு
இறக்கை கட்டி பறக்க செய்தாய் நீ..
உன் வரவால்,
மழையில் மழலைதனம்..
மலருடன் மனம் விட்டு பேச்சு
புத்தகம் படித்தே புலர்ந்த பொழுதுகள் .
நிலவுடன் ஊடல்
நிழலுடன் சிநேகம்
அந்தியில் ஆதவன் மேல் கோபம்
என் காக்கை குரலையும்
குயில் கூவும் குழல் ஓசையாக்கும் முயற்சிகள்..
என் காகித கிறுகல்களையும்
கலை கசியும் ஓவியமாக்கும் முயற்சிகள் ..
என் சிந்தனை சோலையில் எண்ணங்கள்
புகைபடியாமல் இருக்க புகைப்படங்கள் ..
பலருக்கு ஏனோ கொடுமையான சோகம் நீ ..!!
எனக்கு எந்நாளும் இனிமையான சுகம் நீ..!!
யார் அந்த நீ.?
______
எந்நாளும் இனிமை தரும் பொன்னான நீ.??
______
தனித்துவத்தை தலை தூக்கிய நீ.?
______
கோடிட்ட இடத்தை நிரப்பியதோடு
வாழ்வில் கொண்டாட்டத்தை நிரப்பிய
என் அருமை
தனிமை
தனிமையின் முழுமையை உணர்ந்தவர்க்கு
தனிமையும் இனிமையே ..!!











