கவிதை விரும்பிகள் தயவு செய்து கடுப்பாக வேண்டாம். நான் கலாய்க்க போறது, கவிதை என்கிற பெயரில் இங்க கிறுக்கிட்டு
இருக்கும் கிறுக்கல்களை மட்டுமே.!!
கலாய்ப்பதை படிச்சு அனுபவிங்க ஆராயாதிங்க,
"மேல் வரியில எழுத எவ்வளவோ இடம் இருந்தாலும் அத அப்படியே விட்டுட்டு அடுத்த வரியில எழுத தொடங்கினா அது தான் கவிதை"
அந்த நம்பிக்கையில தான் நான் கவிதை எழுதலாம்னு களத்துல இறங்கிட்டேன்.
"கவிதைக்கு பொய் அழகு- அட பொய் தான் நமக்கு கை வந்த கலை ஆச்சே.!!" என்ற ஆர்வத்தில் காகிதத்திற்கும் பேனா முனைக்கும் இடையிலான காற்றில் கவிதை நயம் அபிநயம் பிடிக்க காத்துக்கிடந்த தருணங்கள் பல.
கவிதைக்கு இன்னொரு முக்கியமான தகுதி முதல் தடவை படிச்சா புரியவே கூடாது.
நான் எழுதுன கவிதை பத்து தடவை படிச்சும் கூட புரியவே இல்லன்னு சிலர் சொன்னப்ப, " அடடே நீ சாதிச்சுட்ட போ"-ன்னு எனக்கு நானே சொல்லி சந்தோசப்பட்டேன். இதுல என்ன சிக்கல்னா, என் கவிதை எனக்கே
சில சமயம் புரியாமல் போனதால சாதிச்சேன்னா இல்ல சொதப்பிட்டேன்னோ-ன்னு சந்தேகமும் வந்தது.
இறுதியாக, "கவிதை நடை இல்லை, தெளிவு இல்லை" என்ற உண்மையான விமர்சனங்கள் உணர்த்தியது, நான் இங்க எழுதுவதெல்லாம் கவிதை அல்ல கிறுக்கல்களே என்று.
என் கிறுக்கல்களும் என்னை சார்ந்த ஒரு சிலருக்காவது என்றாவது கவிதையாய் கண்ணில் தெரியும் என்ற நம்பிக்கையில் கிறுக்கல்கள் தொடரும்...!!