அதிகாலை முதல் அந்தி மாலை வரை கண் கொட்டாமல் சுற்றி வந்ததில் சற்று கர்வம் கொண்டேன்.
எங்கு சுற்றினால் என்ன.? பார்வை எல்லைக்குள் இருந்ததில் சற்று அலட்சியம் கொண்டேன்.
பொழுது சாயக் கண்டதும்,
கழற்றி விட்டேன் கர்வத்தை,
விரட்டி விட்டேன் அலட்சியத்தை,
சூட்டிக் கொண்டேன் கண்களில் கலக்கத்தை,
கேட்டுக்கொண்டேன் எனக்குள் நானே,
"யார் அழுதார்கள்,
பூமி தன்னை தானே சுற்றி கொள்ளவில்லை என்று"
'கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் எதற்கு.?'
என்ற ஆறாம் அறிவின் அறிவுரை,
ஆற்றிவிட்டது அடிப்பட்ட அகத்தை.
கண்ணின் காட்சிப் பிழைக்கு,
கதிரவனை மட்டும் குற்றம் சொல்வதில் என்ன நியாயம்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக