வெள்ளி, 20 ஏப்ரல், 2012

முரண்பாடுகளின் மூட்டை


விஞ்ஞானமோமுன்செலுத்த
மெய்ஞானமோ பின்செலுத்தி
விதி விளையாடி கொண்டு தான் இருக்கிறது
என் சிந்தையுடன் நியூட்டனின் மூன்றாம் விதிப்படி..

காலத்திற்கு ஏற்றது போல் மாறதான் வேண்டும் என்றாலும் 
காலத்தை காட்டும் கடிகாரமோ
கடிகார திசை மறுத்து எதிர்திசையில்
சுழன்றதாய்
வரலாற்று சரித்திரமும் இல்லை.
வருங்காலமும் அதை வரவேற்பதாய் தெரியவில்லை

எந்நாளும் மாற்றத்தை மறுப்பவள் அல்ல நான்
மலர்ச்சி தரும் மாற்றத்தை மதிப்பவள் தான் நான்

பூமி தன்னை தானே சுற்றிக் கொள்வதும் ஒரு மாற்றம் தான்
சூரியனை சுற்றி வருவதும் ஒரு மாற்றம் தான்
இவ்விரு மாற்றம் கண்டு மகிழ்ச்சி கொள்ளும் மனித இனம்
பூமி தன் சுற்றுப்பாதையில் சற்று விலகிச்
சுற்றும் மாற்றத்தை மட்டும் மறுப்பதில் தவறேதும் உண்டோ?

எனவே ஊருடன் ஒத்து வாழ துணிவேன்
ஒருபோதும் ஊருக்காக எனக்கு ஒவ்வாத ஒன்றாய்
வாழ துணியேன்

பழமையில் ஊறி திளைத்த என் மனம்
புதுமையை வெறுத்ததில்லை ஓர் நாளும்..
பொறுத்திருப்பேன் பொறுமையுடன் புதுமையும்
எனக்கேற்ற பழமையாய் மாறும் வரை..

சனி, 7 ஏப்ரல், 2012

கடவுள் இருக்கா ?? இல்லையா ??


முன்குறிப்பு :

"இவை அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துகளே .
எந்த வித கொள்கை திணிப்பு நோக்கமும் எனக்கில்லை "

இதில் ஏதாவது கருத்துகள் உங்களது கருத்துகளுடன் முரண்பட்டு இருந்தால் 'இவ என்ன சொல்றது நான் என்ன கேட்கிறது '-ன்னு சொல்லி தட்டிவிட்டுட்டு போய்கிட்டே இருங்க .. ஏன்னா இந்த விஷயத்தை பொருத்த வரைக்கும் 'நம்ம கருத்துகளை மற்றவர்களும் ஏற்று கொள்ளவேண்டும் '-ன்னு நினைக்கிறோம் பாருங்க, அது தான் நம்ம பண்ணுற ரொம்ப பெரிய தப்பு .
                                                           __________________

கடவுள் இருக்கா ? இல்லையா?? ன்னு என்னை பார்த்து கேட்டால் அதுக்கு என்னோட பதில் 'ஒன்னு இருக்கு ஆனா இல்ல அதான் கடவுள்'. அப்படி தான் ஒரு காலம் வரைக்கும் நெனச்சுட்டு இருந்தேன்..

ஆரம்ப கல்வி படித்த வரியில் ஆசிரியை சொல்வதே வேத வாக்கு என்று எண்ணி 'கடவுள்'-ன்னு ஒன்னு இருக்கு. அது நல்லவர்களுக்கு நல்லது பண்ணும் கேட்டவர்களுக்கு தண்டனை கொடுக்கும்-ன்னு நம்பிக்கொண்டுதான் இருந்தேன். 
அப்பாவிடம் இதை பற்றி கேட்டால் " அடபோமா சாமியாவது பூதமாவது..அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது' என்று சொல்லி விடுவார்.
ஆனா அம்மாக்கு கடவுள் மேல 100 % நம்பிக்கை இருக்கு.. 

என்னை சிந்திக்க வைத்த அப்பாவின் கேள்வி:
சுனாமி பூகம்பம் இதனால அப்பாவி மக்களும் சின்ன குழந்தைகளும் இறப்பதை கண்டும் கடவுள் ஏன் காப்பாற்ற வரல..??


அப்பறம் தான் புரிஞ்சுது கடவுள்-ன்னு ஒன்னு இல்லை. ஆனா இயற்கை -ன்னு ஒன்னு இருக்கு .அதுக்கு நல்லவங்க யாரு கெட்டவங்க யாரு-ன்னு தெரியாது.
நான் பெரியவனா இல்ல நீ பெரியவனா -ன்னு மனிதர்களுக்குள் சண்டை வரும் போது, நான் இருக்கேன்டா உங்க எல்லாத்தையும் விட பெரியவன் என்று இயற்கை சீற்றத்தின் மூலமாக பதிலடி கொடுக்கும்.

எனது பார்வையில் கடவுள்:
நம்ம படைத்தது தான் கடவுள்-னா? நம் பெற்றோர்கள் தானே நமக்கு கடவுள். அவங்கள வணங்கி வழிபட வேண்டாம். கடைசி வரைக்கும் நல்லா வாழ வைத்தால் போதும்.


பாடல் வரிகளில் நான் உணர்ந்த கடவுள்:


"பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம் "
"தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
தந்து தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்.
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்"


கஷ்டப்படும் மனிதற்காக கடவுளிடம் வேண்டும் உதடுகளை விட
அவர்களை காப்பாற்ற கொடுக்கப்படும் கைகள் மேலானது.


இந்த பதிவின் மூலமா நான் சொல்ல வரும் இரண்டு விஷயங்கள்:

1 ) உங்களோட மத கொள்கைகளை மற்றவர்கள் மேல் திணிக்க வேண்டாம் .


"பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொன்னதில்லை"




2 ) கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இருக்கலாம் தப்பில்லை.ஆனால்


கடவுளின் பெயரில் மூட நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டாமே..


இத நச்சுனு நாலு வரில சொல்லணும்-னா 


"கடவுள் இல்லை-ன்னு சொல்றான் பாரு 

அவனை நம்பலாம்.

கடவுள் இருக்கு-ன்னு சொல்றான் பாரு 

அவனை கூட நம்பலாம்.

ஆனா நான் தான் கடவுள்னு சொல்றான் பாருங்க 

அவனை மட்டும் நம்பிடவே கூடாது."

dangerous pellows ..:D 

-crazy மோகன் வசனம் (வசூல் ராஜா M.B.B.S)


இவண்

நாத்திகவாதி அல்ல

முற்போக்கு சிந்தனையாளர்