ஞாயிறு, 24 ஜூன், 2012

பாட்டும் நானும்




1) +2 படிக்கும் ஒரு தடவை maths test- ல mark ரொம்ப கம்மியானதால் எங்க 
maths miss என்னைய புடிச்சு கண்ணா பின்னானு திட்டி exam paper –அ மூஞ்சி மேலேயே விட்டு எறிஞ்சுட்டாங்க. அந்த paper-அ கையில எடுத்துட்டு என் friends கிட்ட வந்து..
                      " மரணம் என்னும் தூது வந்தது அது 
                        Maths miss என்னும் வடிவில் வந்தது”
                        “எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கம் இல்லாதவள் என்று ,பாடுங்கள் என் கல்லறையில் இவள் பைத்தியக்காரி என்று "


இப்படி பாடி முடிக்கிறதுக்குள்ள maths miss class- குள்ள entry ஆகிட்டாங்க..
அப்புறம் என்ன டமால் டுமீல்-னு HM வரைக்கும் matter leak ஆகி school முழுக்க famous ஆகிட்டேன்..

பாட்டு :: "யாருக்காக இது யாருக்காக"
படம்:: வசந்த மாளிகை 


2) XYZ company-ல interview முடிச்சு 2 நாள் கழிச்சு தான் result சொன்னங்க  
Result அன்னிக்கு முன்னாடி நாள் room-ல ஒருத்தருக்கும் தூக்கமே வரல. ஒரே பீதி-ல இருந்தோம்.அப்ப இந்த பாட்டெல்லாம் போட்டு எங்கள நாங்களே தேத்திகிட்டோம்.

      வாழ நினைத்தால் வாழலாம் , வழியா இல்லை பூமியில்"

“ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-ன்னு அனுப்பி வெச்சான்
...........
நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன்
நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் அவன் மூடன் 
போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன்"

எப்படியோ அந்த  company லேயே  room ல எல்லாரும் place ஆகிட்டோம்.. அடுத்த நாள் evening ஒரே ஆட்டமும் பாட்டும் கொண்டாட்டமும் தான்.

மனசு கஷ்டமா இருந்தா , கோபம் வந்தா ,துக்கம் வரலன இப்படி பல சூழ்நிலைகளில் எனக்கு துணையாய் வருவது பாடலும் அதன் வரிகளும் ...



2 கருத்துகள்:

sowmiku.pudikum@gmail.com சொன்னது…

:D Muthal nigazhvu unmaiya ? :D :D :P

என்னை போல் நான்... சொன்னது…

unmaiyum poiyum serndha kalavai..:D