வியாழன், 25 அக்டோபர், 2012

நிலாச்சோறு

பதம் பார்த்து வடித்த சோற்றில் பருப்பும் பட்டும் படாமல் நெய்யும் கலந்து கடைந்த அமிழ்தத்தை, பால் நிலாவை காட்டியும் பாட்டி வடை சுட்ட கதையை சொல்லியும் ஊட்ட முற்பட்ட போது இடுப்பில் இருந்து உதறி இறங்கி ஓட்டம் காட்டியது பச்சிளம் குழந்தை. அதன் ஓட்டத்திற்கு ஓடியும், ஆடியும்,பாடியும் ஊட்டி முடித்தாள்.
எப்படி சொல்லி புரிய வைப்பேன் அந்த விளையாட்டு பிள்ளைக்கு, இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின் இவை அனைத்தும், விடுதியில் காய்ந்த சப்பாத்தி உண்டு காற்று வாங்க சென்ற போது, பக்கத்து வீட்டு மாடியில் ஒரு பாச போராட்டமாய் பார்த்து ஏங்க தான் முடியும்.
எத்தனை வயதானால் என்ன,இப்போதும் என் பிடிவாதம் அவளோடு மட்டும் தான்.


கருத்துகள் இல்லை: