சனி, 27 அக்டோபர், 2012

தத்துவத்தின் நிறம் கறுப்பு வெள்ளை

வாழ்க்கையின் எல்லா அணுகுமுறையையும் அழகான தெளிவான எளிமையான தத்துவமாய் கட்டி வைக்கப்பட்ட புதையல் மூட்டை கறுப்பு வெள்ளை பாடல்கள்.
படிக்கும் போது தூக்கம் வராம இருக்க தொலைக்காட்சி பார்ப்பது பள்ளி படிக்கும் போது எனக்கிருந்த ஒரு பழக்கம். குறிப்பாக கணக்கு போடும் போது விடிய விடிய தொலைக்காட்சி பார்த்ததெல்லாம் ஒரு காலம். அந்த இலட்சணத்தில படிச்சும் கூட இளங்கலைப் பட்டம்
பொறியியல் துறையில் எப்படி கிடைத்தது என்பது எனக்கே ஆச்சர்யமாக தான் இருக்கு.
சரி விடுங்க என் சொந்த கதை சோக கதை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
அப்படி படிச்ச காலத்துல 12 மணிக்கு மேல எல்லா அலைவரிசையிலும் ஒளிபரப்பாகும் கறுப்பு வெள்ளை பாடல்களில் என் நெஞ்சில் நின்ற பாடல்களையும் அதில் எனக்கு பிடித்த வரிகளையும்
உங்களோட பகிர்ந்து கொள்ளனும்-ன்னு ஒரு ஆசை.
1) பரம சிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா.? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடண் சொன்னது. அதல் அர்த்தம் உள்ளது.

http://www.youtube.com/watch?v=u2uTvseL6Rw&feature=youtube_gdata_player

2) உட்சி வெயில் சூரியனை மேகம்
மூடுது. நம் உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது. காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது. பேசி கலந்துவிட்டால் கோபம் மாறி நேசம் ஆகுது.

http://www.youtube.com/watch?v=jUI2AlaUsOA&feature=youtube_gdata_player

3) கண்ணும் கண்ணும் கலந்து இன்பம் கொண்டாடுதே. நடனப்போர்.
http://www.youtube.com/watch?v=AMotc9NQ9B8&feature=youtube_gdata_player

4) தமிழுக்கும் அமுதென்று பேர்.
http://www.youtube.com/watch?v=aSadfMd1m-M&feature=youtube_gdata_player

5)சிந்து நதியின் இசை நிலவினிலே,# தேசிய ஒருமைப்பாட்டை வழியுறுத்தும் அருமையான பாடல்.#
http://www.youtube.com/watch?v=aSadfMd1m-M&feature=youtube_gdata_player

6) ஆனிமுத்து வாங்கி வந்தேன் ஆவடி வீதியிலே அள்ளி வைத்து பார்த்திருந்தேன் அழகு கைகளிலே.

கையில் உள்ளதை கொண்டு இங்கு வாழ்வதிலே இந்த இல்லத்தின் நிம்மதி வாழுமடி.

வீட்டிற்கு பிள்ளைக்கு ஊருக்கு நாட்டிற்கு பங்கிட்டு வாழ்வது இன்பமடி.
http://www.youtube.com/watch?v=aSadfMd1m-M&feature=youtube_gdata_player

கருத்துகள் இல்லை: